Monday, April 26, 2010

காதலின் வேதனை

காதலின் வேதனை
பெண்ணே,
நீ விண்ணைத் தாண்டி வருவாயா என்று
காத்துக் கொண்டிருந்தேன்,
நீயோ என்னைத் தாண்டி
சென்று விட்டாயே!

Monday, April 12, 2010

பெண்ணே

பெண்ணே,
காத்து கொண்டு இருக்கிறேன்,
உனக்காக அல்ல
உன்னிடம் உள்ள என்
இதயத்திற்காக!!

Saturday, April 3, 2010


தோல்வியை நான் கண்டதில்லை..
ஆனாலும்,
தோற்றுவிட்டேன்
காதல் என்னும் விளையாட்டில்!!
______________
மலை நீரில் நனைய வேண்டிய எங்களது நிலங்கள்,
நனைகிறது எங்கள் கண்ணீரில்..
விவசாயி!!!!

______________
எப்போது நீ
கடனாளி ஆகிறாயோ,
அப்போது
உன்னை நான் வந்தடைவேன்....
வறுமை!!

______________
பெண்ணே!
உன்னை கொஞ்சுவதற்கு என்னிடம் வார்தைகள் இல்லை..
கொஞ்ச வார்தைகள் இருக்கும் போது
நீ என் அருகில் இல்லையடி!!
______________

Friday, April 2, 2010

எனது கவிதை

காதல் கடிதம்
நான் எழுதிய கடிதங்கள்,
அவள் வீட்டுக் குப்பைத் தொட்டியில்..
ஆனால், அவளுடைய‌ குப்பையோ
என் வீட்டு அலமாரியில்....
_________________
எனது ஏக்கம்
என்னுடைய‌ சந்தோசமான காலம்
காலை 10 முதல் மாலை 4 வரைதான்,
காத்துக் கொண்டிருப்பேன்
மறுநாள் காலை 10 மணிக்காக..
கல்லூரி மாணவன்!!!!
_________________
உன் கண்களைக் கண்டேன்
என் பார்வையை இழந்தேன்....
உன்னைக் காத‌லிக்க தொட‌ங்கினேன்
என் வாழ்க்கையை இழந்தேன்....
________________
காதல்!
நாம் இருவரும் சந்திப்பதற்கு
ஒரு முகவரியாக அமைந்தது...
‌ ________________

ஓடூம் பேரூந்தில்
உன்னைக் கண்ட பிறகு தான்,
பெண்ணே!
என் மனம்
உன் பின்னால் ஓட தொடங்கியது!!
_______________
நண்பா!
உன்னை காதலிக்கும் பெண்ணிடம்
ஒன்றை மட்டும் ஒரு போதும் எதிர் பார்க்காதே..
உண்மை!!!!!

_____________

மாலை 5 மணி ஆகிவிட்டது,
என் குழந்தைகள் என்னை விட்டு போகின்றார்கள்....
பல்கலைக் கழகம்!!!!!!

_____________